Saturday, September 5, 2009

ஊனமுற்றோருக்கு


தொங்கும் கூட்டம் நடுவே
தொத்திப் பாய்ந்து
ஒற்றைக் காலில்
ஒரு கைப்பிடியில்
அலைந்து நின்றான்
மிதிவெடி மிதித்தவன்!

சட்டென திரும்பி
ஜன்னல் ஊடே
ஓடும் மரங்களை
அதிசயத்துப் பார்த்து
பாவனை செய்தேன்!

ஒரு மணிநேரம்
ஒற்றைக் காலில்
தொங்கிக் களைத்தவன்
ஏக்கமாய் முகம்பார்த்தான்!

என் இருக்கைத் தலைமேல்
அழகு வாசகமாய்
இது ஊனமுற்றோருக்கு!

3 comments:

கவிக்கிழவன் said...

நல்லா இருக்கு..

அன்புடன் அருணா said...

நானும் கூட ஏக்கமாய் உணர்ந்தேன்...பூங்கொத்து!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்