
என்னவென்றும் தெரியாமல்
ஏனென்றும் புரியாமல்
ஒருதலையாய் உனைநினைத்து
இன்னும் இன்னும் உருகிட
என் இதயத்திற்கு வலிமையில்லை !
நீ தந்த நினைவுகளை
கழற்றியெறிய முடியவில்லை
தூசு போல் தட்டிவிட்டு
தூரப்போகத் தெரியவில்லை !
கயிறு கட்டப்பட்ட ஆடுபோல்
உன் நினைவுகளின் பின்னே
என் பயணம் !
உயிர்காக்க வந்தவளே
என் உயிர் போக்கி விடுவாயோ !
என் இதயத்தின் துடிப்பிற்கு
உன் இதயத்தின் சக்திகொடு.
No comments:
Post a Comment