Sunday, August 30, 2009

விழித்தெழு நண்பனே


வாசம் வீசும் வசந்தமே
என் பாசம் மாறா நேசவனே
வஞ்சம் இல்லா உன் நெஞ்சமீது
வஞ்சி இட்ட கோலம்
இன்னும் கோலங்களாய் !

காதல் செய்து பலகாலம் கடந்தும்
கன்னியவள் இன்னும் உன் கருவிழிகளில் !

நினைக்க வைத்தவளே நினையாத போது
நீ மட்டும் ஏன்
இன்னும் நினைவுகளோடு !

மிதக்கும் வரைதான் மேகம்
நிலத்தில் வீழ்ந்த பின் நீர்த்துளிதான் !

விடிவிற்காய் காத்திருந்து
விடியும்போது உறக்கமா?

பாதைமறைக்கும் பற்றைகளை
வெட்டியெறி

நாளையவானில் நிலவு ஒன்று
உனக்காக பௌர்ணமி ஆகும்

அதுவரை
நேற்றைய நினைவுகளை மறந்து
கானங்கள் பாடி களித்திருப்போம் !

1 comment:

கவிக்கிழவன் said...

பாதைமறைக்கும் பற்றைகளை
வெட்டியெறி

நாளையவானில் நிலவு ஒன்று
உனக்காக பௌர்ணமி ஆகும்